Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அகவிலைப்படி குறித்த அறிவிப்பு எப்பொழுது..? ஆனால், 4% இல்லையாம்..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.



ஜனவரி மாதத்தில் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதத்திற்கான அகலவிலைப்படி அறிவிப்பு எப்போது வரும் என்று மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 


அக்டோபர் மாதம் தற்போது தொடங்கியுள்ள நிலையில், அகவிலைப்படி உயர்வு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில், நவராத்திரியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 15ஆம் தேதிக்கு பிறகு அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. 


மேலும், ஊழியர்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் அகவிலைப்படிக்கான பலன் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நாட்டில் நிலவும் பணவீக்கம் காரணமாக 3 சதவீதம் மட்டுமே அகலவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அகவிலைப்படி குறித்த அறிவிப்பு எப்பொழுது..? ஆனால், 4% இல்லையாம்..!! அகவிலைப்படி குறித்த அறிவிப்பு எப்பொழுது..? ஆனால், 4% இல்லையாம்..!! Reviewed by Rajarajan on 8.10.23 Rating: 5

கருத்துகள் இல்லை