Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கனமழை காரணமாக நாளை ( 14.11.2023 ) சில மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

 நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.  


மேலும் ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் மிக கனமழை பெய்யக் கூடும் என்றும் அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.


 காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதனை அடுத்து கனமழை  காரணமாக நாளை ( 14.11.2023 ) 2 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 


* கடலூர் ( பள்ளி , கல்லூரிகளுக்கு )


* மயிலாடுதுறை ( பள்ளி , கல்லூரிகளுக்கு )


* புதுச்சேரி ( பள்ளி , கல்லூரிகளுக்கு )

கனமழை காரணமாக நாளை ( 14.11.2023 ) சில மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை கனமழை  காரணமாக நாளை ( 14.11.2023 ) சில மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை  Reviewed by Rajarajan on 13.11.23 Rating: 5

கருத்துகள் இல்லை