Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பணி ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெறுவது எப்படி..!

ஓடி ஓடி வேலை செய்த காலம் முடிந்த பிறகு, நமது வாழ்நாளை நிம்மதியாக கழிக்க வேண்டுமென்று நினைப்போம். இதற்கு பணி ஓய்வு பெற்ற பிறகு, நமக்கான வருமான வழிகள் குறித்த பெரிய கவலை இல்லாமல் இருக்க அதற்கான வழிகளை நாம் வேலை செய்யும் காலத்திலேயே செய்வது நல்லது.


பொதுவாக, பணி ஓய்வு காலம் என்பது ஒரு நபர் பணத்தைப் பற்றி கவலைப்படாமல் ஓய்வெடுக்க விரும்பும் காலமாகும். எனவே, இது போன்று பணி ஓய்வு காலத்தில் வருமான வழிகளை பெறுவதற்கு பல்வேறு வசதிகள் உள்ளன. உங்களின் பணி ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெறுவது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.



பணி செய்யும் காலத்தில் ஓய்வு காலத்தில் பெற விரும்பும் பணத்தின் அளவை முன்கூட்டியே கணித்து வைத்திருப்பது நல்லது. அந்த குறிப்பிட்ட தொகையை ஓய்வு காலத்தில் பெற தற்போது எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு, நீங்கள் விரும்பும் வருமானத்தைப் பெற உங்களின் பணத்தை எந்த திட்டத்தில் முதலீடு செய்வது அதிக லாபத்தை தரும் என்பதை முடிவெடுப்பது அவசியம். பல விதமான ஓய்வூதிய திட்டங்கள் இருந்தாலும், ஒருவருக்கு நல்ல பலன்களை தர கூடிய திட்டங்களில் ஒன்று தான், தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS). இது குடிமக்கள் தங்கள் பணியின் போது அவர்களின் எதிர்காலத்திற்கான வருமானத்தை சேமித்து வைத்து கொள்வதற்கான நல்ல திட்டமாகும்.



மத்திய அரசால் தொடங்கப்பட்ட இந்த NPS திட்டத்தில் நீங்கள் சந்தா செலுத்தியிருந்தால், உங்களின் முதலீட்டை வாகனங்களில் செலுத்த நீங்கள் தேர்வு செய்யலாம். அதாவது, நீங்கள் பங்குச் சொத்துக்களில் 60 சதவீதத்தையும், கடனில் 40 சதவீதத்தையும் ஒதுக்கி முதலீடு செய்தால், இந்த சமமான பகிர்வு தோராயமாக 10 சதவீத வருமானத்தை உங்களுக்கு வழங்கும். அதன்படி, இந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 30 வருட காலத்திற்கு, மாதம் 15,000 ரூபாய் செலுத்தி வந்தால் உங்களின் பணி ஓய்வு காலத்தில் 1 லட்சம் ஓய்வூதியத்தை பெற முடியும். இந்த பிரபலமான திட்டத்தில் பலரும் தங்களது முதலீட்டை செலுத்தி வருகின்றனர். மேலும், இது மிகவும் பாதுகாப்பான திட்டம் என்பதால் எந்த வித ரிஸ்க்கும் இதில் கிடையாது.



உங்களின் ஓய்வு காலத்தில் மாதாந்திர ஓய்வூதியமாக 1 லட்சத்தை பெறுவதற்கான மற்றொரு வழி SIP என்று அழைக்கப்படும் முறையான முதலீட்டுத் திட்டம். உங்கள் எதிர்காலத்திற்காக பணத்தைச் சேமிப்பதற்கான சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று. நீங்கள் 30 வயதில் SIP-இல் பணத்தைப் முதலீடு செய்ய ஆரம்பித்து, 60 வயதாகும் வரை 30 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், உங்கள் ஓய்வூதிய காலத்தில் அதிக பணத்தை சேமிக்க முடியும். உதாரணமாக, நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5666 ரூபாய் SIP-இல் முதலீடு செய்தால், நீங்கள் ஓய்வுபெறும் போது 2 கோடி ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். மேலும் ஒவ்வொரு வருடமும் நீங்கள் சேமித்த பணத்திற்காக 12 சதவிகிதம் வட்டியையும் பெற முடியும்.


ஓய்வூதிய கால முதலீடு குறித்து ஆப்டிமா மணி மேனேஜர்ஸ் நிறுவனத்தின் சிஇஓ கூறுகையில், "ஒரு முதலீட்டாளர் ஆண்டிற்கு 7-8% ரிட்டன்ர்ஸ் தரக்கூடிய புதிய அல்லது பழைய முதலீட்டு வழிகளை தேர்வு செய்யலாம். ஆனால், நீங்கள் முதலீடு செய்வதை நிறுத்திய பிறகு, 30 வருடங்கள் போன்ற பல ஆண்டுகளுக்கு நீங்கள் முதலீட்டுக்காக திட்டமிட வேண்டும்! எனவே, ஓய்வு காலமான 30 ஆண்டுகளுக்கு 1 லட்சம் ஓய்வூதியத்தைப் பெற, உங்களிடம் ரூ.2.76 கோடி நிதி இருக்க வேண்டும். ஏனென்றால், இதற்கான அளவீடு என்பது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 சதவீதம் உயரும். எனவே, எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து புத்திசாலித்தனமாக திட்டமிடுவது அவசியம்!" என்று ஆலோசனை வழங்கினார்.

பணி ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெறுவது எப்படி..! பணி ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெறுவது எப்படி..! Reviewed by Rajarajan on 2.8.23 Rating: 5

கருத்துகள் இல்லை