Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது – 93.80% மாணவர்கள் தேர்ச்சி!



10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது – 93.80% மாணவர்கள் தேர்ச்சி!


தமிழ்நாட்டில் கல்வித் தரத்தை நிரூபிக்கும் வகையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் பெற்றோரால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இம்முடிவுகள், தற்போதைய கல்விச் சூழலின் முன்னேற்றத்தை வெளிப்படுத்துகின்றன.


2025ஆம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கடந்த மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை மாநிலம் முழுவதும் நடைபெற்றன. இந்த தேர்வில் 9 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர். தேர்வு முறையாக, மாணவர்களின் அறிந்த அறிவை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று வெளியான தேர்வு முடிவுகளின்போது, மாணவர்கள் மொத்தமாக 93.80% சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டைவிட சிறந்த முன்னேற்றத்தைக் குறிக்கிறது. 

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக சதவிகித தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 98.31% பெற்று சிவகங்கை முதலிடம்

சிவகங்கை - 98.31% 

விருதுநகர் - 97.45%

தூத்துக்குடி - 96.76% 

கன்னியாகுமரி - 96.66%

திருச்சி - 96.61%

மேலும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 5 ஆம் தேதி முதல் நடைபெற்றன, இதில் 8,23,000 மாணவர்கள் பங்கேற்றனர். இந்த முடிவுகளும் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த ஆண்டு 10ம் வகுப்பு முடிவுகள், மாணவர்களின் உழைப்பையும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றன. தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும், அவர்களின் எதிர்கால கல்விக்கான படிகளை உறுதியாக எடுத்து வைக்கட்டும் என வாழ்த்துகிறோம். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.



10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது – 93.80% மாணவர்கள் தேர்ச்சி! 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது – 93.80% மாணவர்கள் தேர்ச்சி! Reviewed by Rajarajan on 16.5.25 Rating: 5

கருத்துகள் இல்லை