Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கு அறிவிப்பு


👉தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று முதல் அதாவது மார்ச் 9 முதல் மார்ச் 16 ஆம் தேதி வரை தேர்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

👉நடைபெறவுள்ள மே 2022, 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து, இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

👉ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு (+1) தேர்வெழுதி பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தேர்வர்கள் அனைவரும், தற்போது மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வெழுதுவதற்கும், முதலாம் ஆண்டு (+1) தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

👉மே 2022, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள், மார்ச் 9 ஆம் தேதி (புதன் கிழமை) முதல் மார்ச் 16 ஆம் தேதி வரை (ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

👉மேற்காண் தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள், வரும் 18-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 21-ஆம் தேதி (திங்கட்கிழமை) வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக ) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/- (மேல்நிலை) / ரூ.500 (10th) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்-லைனில் தக்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹கூடுதல் செய்தி-2🌹



பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கு அறிவிப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கு அறிவிப்பு Reviewed by Rajarajan on 16.3.22 Rating: 5

கருத்துகள் இல்லை