Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு..?

 


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டிற்கு இரண்டு முறை ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி புதிதாக 4 சதவீத அளவிற்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த அகவிலைப்படி உயர்வு விலைவாசி உயர்வை ஈடு கட்டுவதற்காக அரசு ஊழியர்கள் வழங்கப்படுகிறது. இது குறித்து அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு பொது செயலாளர் சிவகோபால் மிஸ்டர் அவர்கள் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஜனவரி 2023 தவணைக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். 


அதன்படி, நடப்பு தவணைக்கான அகவிலைப்படி உயர்வானது நாலு சதவீதம் உயர்த்தப்பட்டு தற்போதைய 38% DA ஆனது 42 % ஆக அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன் அடைவார்கள். உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வுக்கான மத்திய அரசின் ஒப்புதல் குறித்து விரைவில் தகவல்கள் வெளியாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு..? மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு..? Reviewed by Rajarajan on 5.2.23 Rating: 5

கருத்துகள் இல்லை