Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

வி கே மாங்காடு அரசு உயர்நிலை பள்ளியில் கல்வி சீர் வழக்கும் விழா

வேலூர் மாவட்டம் ஆற்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட  விகே மாங்காடு கிராமத்தில் உள்ளஅரசு அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்று கல்வி சீர் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று உள்ளது. 

வி கே மாங்காடு கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்க ஊரில் உள்ள தங்கள் பிள்ளைகள் கல்வி கற்கும் அரசு உயர்நிலை பள்ளிகு கல்வி சீர் வழங்கும் விழாவை வெகு சிறப்பாக நடத்தி முடித்தனர். இந்த கல்வி சீர் வழங்கும் விழாவில் அவ்வூர் மக்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி பயில்வதற்கு தேவைப்படும் அடிப்படை பொருட்களான கணிப்பொறி, ups, டேபிள், சேர், நாற்காலி, மின் விசிறி, எல் ஈ டி  விளக்கு  மற்றும் பள்ளிக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஊர் மக்கள்  பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் S.சிகாமணி முன்னிலையில் பள்ளியின் தலைமையாசிரியை திருமதி எம் கௌரியிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இவ்விழாவில் கலந்து கொண்ட ஊர் பொது மக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அவர்கள் பள்ளிக்கு தேவைப்படும் பொருட்கள் எப்பொழுதும் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சீர் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
வி கே மாங்காடு அரசு உயர்நிலை பள்ளியில் கல்வி சீர் வழக்கும் விழா  வி கே மாங்காடு அரசு உயர்நிலை பள்ளியில் கல்வி சீர் வழக்கும் விழா Reviewed by Rajarajan on 22.2.19 Rating: 5

கருத்துகள் இல்லை