Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

நாடு முழுவதும் நாளை மறுநாள் கோவிட் தடுப்பூசி ஒத்திகை

நாடு முழுவதும் நாளை மறுநாள் கோவிட் தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இரு தினங்களுக்கு முன் ஆந்திரா, அஸ்ஸாம், குஜராத், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. 
இந்நிலையில், இன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு ராஜேஷ் பூஷன், நாளை மறுநாள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். 

அனைத்து மாநில தலைநகரங்களிலும், மூன்று அமர்வுகளாக இந்த ஒத்திகை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி தமிழகத்தில் இந்த ஒத்திகை நடைபெற இரு;பபதாக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 
நாடு முழுவதும் நாளை மறுநாள் கோவிட் தடுப்பூசி ஒத்திகை நாடு முழுவதும் நாளை மறுநாள் கோவிட் தடுப்பூசி ஒத்திகை Reviewed by Rajarajan on 31.12.20 Rating: 5

கருத்துகள் இல்லை