Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஏ.ஐ.சி.டி.இ. பரிந்துரையால் மீண்டும் பொறியியல் பட்டதாரிகள் B.ED கல்லூரிகளில் சேர வாய்ப்பு





தமிழகத்தில் பி.எட்., படிப்புகளில் கடந்த 2015-16 கல்வியாண்டு முதல் பி.இ. பட்டதாரிகளும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். பி.எட். படிப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய நான்கு பிரிவுகளில் மட்டும் இவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு வருகின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில் மொத்தமுள்ள இடங்களில் 20 சதவீத இடங்கள், அதாவது 220 முதல் 240 வரையிலான இடங்கள் இந்தப் பிரிவினருக்கு ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டது. 

ஆனால், பொறியியல் மாணவர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாத காரணத்தால், இந்த இடஒதுக்கீடு படிப்படியாகக் குறைக்கப்பட்டு, கடந்த 2018-19-ஆம் கல்வியாண்டில் மொத்த பி.எட்., இடங்களில் வெறும் 5 சதவீதம் மட்டுமே பொறியியல் பட்டதாரிகளுக்கு ஒதுக்கப்பட்டது. நிகழாண்டிலும் (2019-20 சேர்க்கை) பி.இ. பட்டதாரிகளுக்கு 5 சதவீத பி.எட். இடங்கள் மட்டுமே ஒதுக்க முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




ஏ.ஐ.சி.டி.இ வழிகாட்டுதலின்படி  பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் பி.எட். முடிப்பதை கட்டாயமாக்கலாம் என தெரிகிறது. இதன்படி மீண்டும் b.ed படி பொறியியல் பட்டதாரிகள் சேர்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பல்கலைக்கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஏ.ஐ.சி.டி.இ. பரிந்துரையால் மீண்டும் பொறியியல் பட்டதாரிகள் B.ED கல்லூரிகளில் சேர வாய்ப்பு ஏ.ஐ.சி.டி.இ. பரிந்துரையால்  மீண்டும் பொறியியல் பட்டதாரிகள் B.ED கல்லூரிகளில் சேர வாய்ப்பு Reviewed by Rajarajan on 6.7.19 Rating: 5

கருத்துகள் இல்லை