Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகம் முழுவதும் விடிய விடிய நடைபெற்ற மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் கலந்தாய்வு



நேற்று முதல் தமிழகம் முழுவதும் அரசு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது நேற்றைய முதல் நாள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்  பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. இந்த கலந்தாய்வு நேற்று  பல மணி நேரமாக இது இரவு முழுவதும் தொடர்ந்ததால் ஆசிரியர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளானதாக தெரிகிறது.

நேற்று நடைபெற்ற மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் கலந்துகொண்ட ஆசிரியர் ஒருவர் கூறுகையில் தொழில்நுட்பங்கள் எவ்வளவு விரிவடைந்து இருந்த நிலையிலும் பள்ளிக்கல்வித்துறை கலந்தாய்வை பல மணி நேரமாக நடத்துவது வேதனைக்குரியது,இரவு முழுவதும் நடைபெறும் பொழுது ஆசிரியர்கள் மிகவும் களைப்படைந்து  காணப்படுகின்றன, பெண் ஆசிரியர்களின் நிலை சொல்லி மாளாது. எனவே எதிர்வரும் காலங்களில் துரிதமாக கலந்தாய்வு நடத்துவதற்கு ஏதுவாக தொழில்நுட்பங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் விடிய விடிய நடைபெற்ற மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் விடிய விடிய நடைபெற்ற மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் கலந்தாய்வு Reviewed by Rajarajan on 12.11.19 Rating: 5

கருத்துகள் இல்லை