Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு தொடக்க கல்வி இயக்குனரின் உத்தரவு!

 தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2021-2022) தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு, பொது மாறுதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மாறுதல் பெற்ற ஆசிரியர்களை விடுக்க வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தற்போது அரசு ஊராட்சி ஒன்றிய / நகராட்சி/ அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் வழங்கப்பட உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பித்தல் பாதிப்பு ஏற்படக்கூடும்.


அதனால் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் மாணவர்களுக்கு கற்பித்தலில் பாதிப்பு ஏற்படாதவாறு மற்ற அரசு பள்ளிகளில்/ நிதி உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாக பணிபுரியும் ஆசிரியர்களை மாற்றுப்பணியில் நியமனம் செய்ய ஆணை பிறப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் வழங்கப்பட்ட ஆசிரியர்களை விடுவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு தொடக்க கல்வி இயக்குனரின் உத்தரவு! தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு தொடக்க கல்வி இயக்குனரின் உத்தரவு! Reviewed by Rajarajan on 20.10.22 Rating: 5

கருத்துகள் இல்லை