Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கு தடை, ஆனால் நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி

 1 – 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் மாதம் 21 முதல் 30-ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடத்தப்பட்டது. மேலும் இந்த ஆண்டு முதன் முதலாக 4,5ம் வகுப்பு மாணவர்களுக்கு மொபைல் ஆப் வாயிலாக காலாண்டு தேர்வுக்கு இணையான தொகுத்தறியும் திறன் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து அக்டோபர் 1-ம் தேதி முதல் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி நிர்வாகங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வந்தது.


இதனையடுத்து தமிழக தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளை திறந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளது. ஒரு வேளை பொதுத்தேர்வு எழுதும் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேவைப்பட்டால் மாவட்டக் கல்வி அலுவலரின் அனுமதி பெற்று அரை நாள் மட்டும் சிறப்பு வகுப்பு நடத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கு தடை, ஆனால் நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கு தடை, ஆனால் நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி  Reviewed by Rajarajan on 3.10.22 Rating: 5

கருத்துகள் இல்லை