Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வகுப்பறை செயல்பாடுகளை கண்காணிக்க ஆண்ட்ராய்ட் ஆப்

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வகுப்பறை செயல்பாடுகளை ஆண்ட்ராய்ட் செயலி மூலம் கல்வி அலுவலர்கள் கண்காணிக்கும் முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் வகுப்பறையில் எவ்வாறு பாடம் நடத்துகிறார்கள் என்பதை ஆண்ட்ராய்டு செயலி மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கற்பித்தல், மாணவர்களின் கற்றல் திறனை வெளிப்படுத்துதல், மாணவர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு விடையளித்தல், வகுப்பறை மேலாண்மை, பதிவேடு பராமரித்தல், செயல்வழிக் கற்பித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆசிரியர்களின் செயல்பாட்டை செயலி மூலம் கல்வி அலுவலர்கள் மதிப்பீடு செய்து இயக்குநரகத்துக்கு உடனடியாக  தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



மேலும் பள்ளிகளை ஆய்வு செய்ய வரும் கல்வி அலுவலர்கள், பதிவேட்டுக்கு பதிலாக செயலி மூலம் மாணவர்களின் கருத்துகளை கேட்டு ஆசிரியர்களின் செயல்பாட்டை மதிப்பீடு செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சோதனை முறையில் சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த முறையானது விரைவில் மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அமலுக்கு வர இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வகுப்பறை செயல்பாடுகளை கண்காணிக்க ஆண்ட்ராய்ட் ஆப் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வகுப்பறை செயல்பாடுகளை கண்காணிக்க ஆண்ட்ராய்ட் ஆப் Reviewed by Rajarajan on 4.10.19 Rating: 5

கருத்துகள் இல்லை