Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்கள் பயின்ற நீட் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட விவரங்களை அனுப்ப மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவு




மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்கள் பயின்ற நீட் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட விவரங்களை கல்லூரிகள் அனுப்ப மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் தேர்வுக் குழு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மாணவர்களின் விவரங்களை அளிக்குமாறு, உயர்நீதிமன்றம் தேர்வுக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் டீன்கள் தங்கள் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களின் பெயர்கள், அவர்கள் உயர்நிலை பள்ளிக் கல்வியை முடித்த ஆண்டு, பயின்ற நீட் தேர்வு மையம். அவர்கள் எத்தனை முறை நீட் தேர்வு எழுதினர் என்பது உள்ளிட்ட விவரங்களை வரும் 22-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்கள் பயின்ற நீட் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட விவரங்களை அனுப்ப மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவு இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்கள் பயின்ற நீட் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட விவரங்களை அனுப்ப மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவு Reviewed by Rajarajan on 17.10.19 Rating: 5

கருத்துகள் இல்லை