Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தீவிர பரிசீலனை


அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் பணி யாற்றி வரும் கௌரவவிரிவுரையாளர்களை, பணி நிரந்தரம் செய்வது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக உயர்கல்வித்துறைச் செயலர் மங்கத் ராம் ஷர்மா கூறினார்.

*.சென்னையில் தமிழக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட் டிருந்த மத்திய அரசின் அனை வருக்கும் உயர்கல்வித் திட்டம் (ரூசா) குறித்த கருத்தரங்கில் பங் கேற்ற அவர்

இதுகுறித்து அளித்த பேட்டி

*.அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களின் நிலையை உயர்த்த இரண்டு விதமாக தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

*.அதாவது, அவர்களுக்கு ஏற்கெனவே ரூ.10,000 மாத ஊதியம் வழங்கப்பட்டது.

*.இப்போது ரூ. 15,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதை மேலும் உயர்த்தி ரூ. 25,000 ஆக வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

*.இதுகுறித்து அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால், அதே நேரம், அவர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்தும் அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்றார் 
கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தீவிர பரிசீலனை கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தீவிர பரிசீலனை Reviewed by Rajarajan on 24.10.19 Rating: 5

கருத்துகள் இல்லை