வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55%தில் இருந்து 8.65% சதவீதமாக உயர்வு
வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 0.10% அதிகரிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரியில் இபிஎப்ஓ-ன் அறங்காவலர்கள் கூட்டம் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தலைமையில் நடைபெற்றது.
அதில், 2018-2019ம் நிதியாண்டிற்கு வட்டி விகிகத்தை 8.65 சதவீதமாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் ஏப்ரலில் ருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) நிர்ணயம் செய்த வட்டி விகிதத்திற்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் தற்போது வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 0.10% அதிகரித்து 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55%தில் இருந்து 8.65% சதவீதமாக உயர்வு
Reviewed by Rajarajan
on
17.9.19
Rating:

கருத்துகள் இல்லை