பி.எஸ்.சி., எஞ்சினியரிங் பட்டம் வழங்க திட்டமிடம்..! மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஆலோசனை
ஐஐடியில் படிப்பில் பலவீனமாக இருக்கும் மாணவர்களை ஒரு இளநிலை அறிவியல் பட்டப் படிப்புடன் முன்கூட்டியே வெளியேறும் திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் JEE மெயின் தேர்வுக்கு 9 லட்சம் பேர் விண்ணப்பித்தாலும், நாட்டில் உள்ள 23 ஐஐடிக்களில் 13 ஆயிரத்து 500 பேர் தான் சேர்க்கை பெறுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத் தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 2 ஆயிரத்து 461 மாணவர்கள் சரிவர படிக்காததாலும், கடினமான பாடங்களின் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் அவர்கள் பாதியிலே படிப்பைக் கைவிடும் நிலை ஏற்படுகிறது.
பொதுவாக பி.டெக்., படிப்புக்களுக்கு 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் 3 ஆண்டுகளிலேயே படிப்பை நிறுத்திக் கொண்டு வெளியேறுவோருக்கு பி.எஸ்.சி., எஞ்சினியரிங் பட்டம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக ஐஐடியின் கவுன்சில் தீர்மானிக்கும் குறைவான கல்வி கற்கும் திறன் இருப்பவர்களை மட்டுமே 2-வது பருவம் முடிந்த பின் 3-ம் ஆண்டோடு வெளியேறும் வாய்ப்பு வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.
இந்த திட்டம் குறித்து ஆலோசிக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் ஐஐடி கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
பி.எஸ்.சி., எஞ்சினியரிங் பட்டம் வழங்க திட்டமிடம்..! மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஆலோசனை
Reviewed by Rajarajan
on
27.9.19
Rating:
Reviewed by Rajarajan
on
27.9.19
Rating:


கருத்துகள் இல்லை