Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கனமழை பெய்து வரும் நிலையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா பெற்றோர்கள் கேள்வி..?

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டி வருகிறது. தற்சமயம் பள்ளிகளுக்கு காலாண்டு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் இன்று பள்ளி விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று பள்ளி வழக்கம்போல செயல்படும் என்றும் காலாண்டு தேர்வு காரணமாக விடுமுறை அளிக்க இயலாது என அறிவித்துள்ளனர். கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளி வழக்கம் போல செயல்படும் என அறிவிப்பு வெளியானது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கனமழை பெய்து வரும் நிலையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா பெற்றோர்கள் கேள்வி..? கனமழை பெய்து வரும் நிலையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா பெற்றோர்கள் கேள்வி..? Reviewed by Rajarajan on 19.9.19 Rating: 5

கருத்துகள் இல்லை