Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

நாளை பள்ளிக்கு விடுமுறையா..? கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

 புதன்கிழமை (ஜன.18- ஆம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். புதன்கிழமை (ஜன.18- ஆம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கடந்த 2 நாள்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு 15,16,17 ஆகிய 3 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 15-ஆம் தேதி பொங்கல், 16-ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 17-ஆம் தேதி காணும் பொங்கல் என்று 3 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 18-ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில், ஜன.18-ஆம் தேதி புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா். பொங்கலுக்கு பின் புதன்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை எனவும் அவா் தெரிவித்தாா்.

நாளை பள்ளிக்கு விடுமுறையா..? கல்வித்துறை அமைச்சர் விளக்கம் நாளை பள்ளிக்கு விடுமுறையா..? கல்வித்துறை அமைச்சர் விளக்கம் Reviewed by Rajarajan on 17.1.23 Rating: 5

கருத்துகள் இல்லை