Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்து அறிவிப்பு தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம்

 


தமிழகத்தில் 2022- 2023 ஆம் கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை சமீபத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சரால் வெளியிடப்பட்டது. அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – 13.03.23 முதல் 03.04.23 வரையிலும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வை சுமார் 8.8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர். ,அத்துடன் மொத்தம் 3,169 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.


பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அடங்கிய பாடத்திற்கு 225 ரூபாயும், செய்முறை அல்லாத பாடங்களுக்கு 175 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 11 ம் வகுப்பு அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு பாடத்திற்கு 50 ரூபாய் எனவும் இதர கட்டணம் 35 ரூபாயும் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 06.01.2023 மதியம் முதல் 20.01.2023 மாலை 5 மணிக்குள் மாணவர்களிடமிருந்து தேர்வு கட்டணத்தை பெற்று https://www.dge1.tn.gov.in தேர்வுகள் துறை இணையதளத்தில் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்து அறிவிப்பு தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்து அறிவிப்பு தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் Reviewed by Rajarajan on 7.1.23 Rating: 5

கருத்துகள் இல்லை