TNPSC கணக்கு அலுவலர் நிலை – III பணியிடத்திற்கான தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை – III பணியிடத்திற்கான தேர்வானது கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. தற்போது இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நேர்முகத்தேர்வு:
தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை – III பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை TNPSC தேர்வு வாரியம் கடந்த ஆண்டு வெளியிட்டது. மேலும் இப்பணியிடத்தில் காலியாக இருக்கும் 23 இடங்களில் தகுதியான நபர்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் கணினி வழித்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி இப்பணியிடத்திற்கான கணினி வழித்தேர்வானது கடந்த அக்டோபர் மாதம் 8ம் தேதி அன்று நடைபெற்றது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 282 தேர்வர்கள் எழுதினார்கள். இத்தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அதன்படி தற்போது இத்தேர்வில் கலந்து கொண்ட தேர்வர்கள் இட ஒதுக்கீடு, மதிப்பெண்கள் மற்றும் பிற விதிகள் அடிப்படையில் நேர்முகத்தேர்விற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகிற 25ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாக TNPSC தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
Reviewed by Rajarajan
on
18.1.23
Rating:


கருத்துகள் இல்லை