Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பள்ளிக் கல்வித்துறையில் பத்தாயிரம் ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டில் 9494 புதிய ஆசிரியர்கள் பணிநியமனம் செய்ய உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 






புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் வேளையில், புதிய ஆசிரியர்களும் பணியமர்த்தப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அளித்துள்ளார். இந்த ஆண்டு ஜூன் 20ம் தேதி முதல் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்க உள்ளது. இந்த மாணவர்களுக்கு என்.ஜி.ஓ, காவல்துறை அதிகாரிகள் மூலம் சிறப்பு வகுப்புகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தவிர நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகமாகி இருக்கிறது. மேலும், பள்ளிகளில் மாணவர்களை தக்கவைத்துக் கொள்ள உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறோம். இதனுடன் அரசுப்பள்ளிகளில் 9,494 புதிய ஆசிரியர்களையும் நியமிக்க இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறையில் பத்தாயிரம் ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக அமைச்சர் அறிவிப்பு பள்ளிக் கல்வித்துறையில் பத்தாயிரம் ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக அமைச்சர் அறிவிப்பு Reviewed by Rajarajan on 15.6.22 Rating: 5

கருத்துகள் இல்லை