Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஆசிரியர்களை பழிவாங்கும் செயல் என ஆசிரியர்கள் வேதனை

 2022-23 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். மேலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் கல்வியாண்டு தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் சேலம் மாவட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார வள மைய மேற்பார்வையாளருக்கு, ஆன்லைனில் ஆலோசனை கூட்டத்தை நேற்று நடத்தினார். அந்த கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்தார்.


அதில் ஆண்ட்ராய்டு போனில், ‘கூகுள் ரீடிங் அலாங்’ எனும் செயலியை, ஆசிரியர் பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள கதைகளை, ஒன்று முதல், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, தினமும் வாசிக்க வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியது, எங்களுக்கு விடுமுறை கொடுக்கக்கூடாது என்பதற்காகவே பல்வேறு பணிகளை யோசித்து வழங்குகின்றனர். விடைத்தாள் மதிப்பீடு, பயிற்சி உள்ளிட்டவற்றுக்கு செல்லாத ஆசிரியர்கள், பள்ளியில் இருந்து கொண்டு, மாணவர்களை தினமும் வரவழைத்து கதைகளை வாசிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது ஆசிரியர்களை பழிவாங்கும் உத்தரவாகவே தோன்றுகிறது என்று கூறியுள்ளனர்.

ஆசிரியர்களை பழிவாங்கும் செயல் என ஆசிரியர்கள் வேதனை ஆசிரியர்களை பழிவாங்கும் செயல் என ஆசிரியர்கள் வேதனை Reviewed by Rajarajan on 8.6.22 Rating: 5

கருத்துகள் இல்லை