Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மாணவர்களை தனிப்பட்ட இடங்களுக்கு பேராசிரியர்கள் அழைக்கக் கூடாது - சென்னை பல்கலைக்கழகம்



சென்னை பல்கலைக்கழகம் பேராசிரியர்கள், மாணவர்களை தங்கள் வீடுகள், தனிப்பட்ட இடங்கள் ஆகியவற்றுக்கு அழைக்கக் கூடாது என்று சென்னை பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
முதுகலை மாணவர்கள், ஆராய்ச்சிப் பிரிவு மாணவர்கள் பொதுவாக, தங்களின் கல்வி சார்ந்து கல்லூரி நேரம் போக பேராசிரியர்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்திப்பது வழக்கம். இருப்பினும், அண்மைக் காலமாக பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகம் எழுப்பப் பட்டு வருவதால், அவற்றைத் தவிர்க்கவும், கல்வியில் தரத்தை மேம்படுத்தவும், சென்னை பல்கலைக்கழகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களை தனிப்பட்ட இடங்களுக்கு பேராசிரியர்கள் அழைக்கக் கூடாது - சென்னை பல்கலைக்கழகம் மாணவர்களை தனிப்பட்ட இடங்களுக்கு பேராசிரியர்கள் அழைக்கக் கூடாது - சென்னை பல்கலைக்கழகம் Reviewed by Rajarajan on 31.8.19 Rating: 5

கருத்துகள் இல்லை