Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

விடுமுறையில் சிறப்பு வகுப்புக்கு தடை


'விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது' என, அனைத்து பள்ளிகளுக்கும், கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்வி துறையின், வேலை நாள் காலண்டர் அடிப்படையில் தான் இயங்க வேண்டும். பள்ளி கல்வி துறையின் விதிமுறைகளை பின்பற்றி, பள்ளிகள் நடத்தப்படும் என, உறுதிமொழி கடிதம் அளித்த பிறகே, அந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
ஆனால், பல பள்ளிகள், இந்த உறுதிமொழியை சரியாக பின்பற்றுவதில்லை. தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, வேலை நாட்களையும், தேர்வு நாட்களையும் நிர்ணயம் செய்கின்றன.மேலும், பள்ளி கல்வி துறை விடுமுறை அறிவிக்கும் நாட்களில், சில பள்ளிகள், சிறப்பு வகுப்புகளை நடத்தி, மாணவர்களை வர வைக்கின்றன.இது குறித்து, பெற்றோர் தரப்பில், தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து, விடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, பள்ளி கல்வி துறை எச்சரிக்கை விடுத்துள்ளது


விடுமுறையில் சிறப்பு வகுப்புக்கு தடை விடுமுறையில் சிறப்பு வகுப்புக்கு தடை Reviewed by Rajarajan on 26.8.19 Rating: 5

கருத்துகள் இல்லை