அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி..!
வாக்காளர் அட்டையுடன், 'ஆதார்' எண் சேர்ப்புக்கான பணிகளை மேற்கொள்ள, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு, கற்பித்தல் பணி மட்டுமின்றி, பல்வேறு விதமான அரசு துறை பணிகளும் வழங்கப்படுகின்றன.இந்த வரிசையில், புதிதாக வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளையும் மேற்கொள்ள, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் உத்தரவுப்படி, இந்த பணிகளுக்கு செல்லுமாறு, பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.இந்த பணிகளை அனைத்து வேலை நாட்களிலும், பிற்பகல் 3:00 மணி முதல் கூடுதல்பணியாக மேற்கொள்ளவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி..!
 
        Reviewed by Rajarajan
        on 
        
10.9.22
 
        Rating: 

கருத்துகள் இல்லை