Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஆசிரியர்கள் ஏன் மாநாட்டிற்கு வர வேண்டும்?

 


ஆசிரியருக்கு வணக்கம்..




 *ஏன் மாநாட்டிற்கு வர வேண்டும்?*




ஒவ்வொரு சங்கமும்


👉🏼 மாலை நேர ஆர்ப்பாட்டம்


👉🏼 கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்


👉🏼 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்


👉🏼ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் 


👉🏼தற்செயல் விடுப்பு போராட்டம்


👉🏼உண்ணாவிரதம் 


👉🏼மனித சங்கிலி போராட்டம்


👉🏼 காத்திருப்பு போராட்டம்


*இறுதியாக*


🤲🏼வேலை நிறுத்தம் 




என பல போராட்டங்களை சந்தித்து *இறுதியில் சந்திப்பது முதலமைச்சரின் நம்பிக்கையான வாக்குறுதிகளை தான்* அவ்வாக்குறுதிகளின் அடிப்படையில் போராட்டங்கள் முடிவுக்கு வரும். இதுபோல கடந்த 18 ஆண்டுகளாக போராட்டங்கள் தொடர்கின்றன. 




ஆனால் இயக்க வரலாற்றில் போராட்ட வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு *இவை எல்லாம் செய்வதற்கு முன்னே முதலமைச்சர் நம்மோடு பேச வருகிறார்* 




பேச்சுவார்த்தையில் 10 சங்கப் பிரதிநிதிகளுக்கு முன்னால் தரும் வாக்குறுதிகளை *பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் முன்னே தர வருவார் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றோம்.*




மாநாட்டில் கலந்துகொள்ளும் நம்மை கண்டு *இத்தனை ஊழியர்கள் நம்மை நம்பி இருக்கிறார்கள் என்ற எண்ணம் அவர் மனதில் ஏற்பட்டால் மட்டுமே நேர்மறையான சில வார்த்தைகளை அவர் சொல்ல நேரிடும்*. எனவே *களப்போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் நாளை நடக்கும் மாநாட்டில் ஒரு அரசு ஊழியராக ஆசிரியராக கட்டாயம் கலந்து கொண்டு இதுவரை ஆற்றாத களப்பணியை நாளைக்கு ஆற்ற* மாநாட்டிற்கு வர வேண்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.




சமூகத்தில் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் *நன்மதிப்பு இருப்பது நாம் செய்யும் பணியால் மட்டுமே* இந்த பணிக்கு ஒரு பாதிப்பு என்றால் யாரோ சிலர் போராட மாட்டார்கள் *உங்கள் பணி உங்கள் வாழ்க்கை உங்கள் பெருமை உங்கள் நம்பிக்கைக்கு நீங்கள் தான் களத்திற்கு நேரடியாக வரவேண்டும்* உங்கள் கௌரவத்தை உங்கள் வாழ்க்கையை காத்துக் கொள்ள நம்பிக்கையோடு மாநாட்டிற்கு வரும்படி அன்புடன் அழைக்கின்றோம்


உறவினர் திருமணங்களுக்கு ஆயிரம் கி.மீ செல்லும் நாம், உணர்வான நம் பணிக்கான கோரிக்கை போராட்டத்திற்கு சில கிலோமீட்டர் செல்வது பெரிதல்ல.


*இது உங்கள் வாழ்க்கைக்கானது உங்களுக்கானது யாரையும் எதிர்பார்க்காமல் துணிந்து எழுந்து வாருங்கள்.*




*மாநாட்டில் எல்லாம் மாறிவிடும் என்று சொல்லவில்லை*




 ஆனால் 




*நீண்ட பயணம் முதல் அடியில் இருந்து தான் தொடங்கும்* என்ற பொன்மொழிகள் மீது நம்பிக்கை கொண்டு வாருங்கள்.. 


*10/9/22 சனிக்கிழமை சென்னை தீவுத்திடலில் நடைபெறும் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் நமது கடமைகள்.*


💥💥💥💥💥💥💥




👉*கடமையை செய்வோம் உரிமையை கோருவோம் என்பது நமது அனைவரின் தாரக மந்திரம்.*




👉மாநாட்டில் முதல்வர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நாம் செய்ய வேண்டியதை சரியாக செய்வோம்.




👉கண்ணுக்கு முன் இருக்கும் நமது ஊழியர்களை/ ஆசிரியர்களை திரட்டுவது நமக்கு கடினம் என்றால், கண்ணுக்கு தெரியாத பொருளாதார கோரிக்கைகளை நிறைவேற்ற ஆட்சியாளர்கள் யோசிப்பார்கள் இல்லையா? அவர்களை யோசிக்க விடாமல்,




👉தன்னெழுச்சியாக அனைவரும் ஏதோ ஒரு வழியில் மாநாட்டிற்கு சென்று அடைவது என முடிவு எடுப்போம்.




👉நாம் ஒருவர் செல்லவில்லை யென்றால் என்ன என்று பின்வாங்காதீர்கள். ஒவ்வொருவரும் சேர்ந்தால்தான் கூட்டம்.




👉நமது உழைப்பில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற சில வீணர்களின் வீண்பேச்சை கேட்டு மாநாட்டிற்கு வராமல் இருந்து விடாதீர்கள். அந்த வீணர்களையும் அழைத்து வர முயற்சி செய்யுங்கள்.


*இம்மாநாடு கோரிக்கைகள் வென்றெடுக்கும் முதல் படியாக இருக்கலாம்*


🚶🏻‍♂️🚶🏻‍♀️🚶🏻‍♂️🚶🏻‍♀️🚶🏻‍♂️🚶🏻‍♀️🚶🏻‍♂️🚶🏻‍♀️


நல்லதே நடக்கும்


நம்பிக்கையோடு செல்வோம்

ஆசிரியர்கள் ஏன் மாநாட்டிற்கு வர வேண்டும்? ஆசிரியர்கள் ஏன் மாநாட்டிற்கு வர வேண்டும்? Reviewed by Rajarajan on 10.9.22 Rating: 5

கருத்துகள் இல்லை