Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் மூட கோரிக்கை!

தமிழகத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று தற்போது அதிகமாக பரவி வருகிறது. மேலும் கொரோனா 2 ஆம் அலையின் பாதிப்பு சமீபத்தில் குறைந்து காணப்பட்ட நிலையில் தமிழகத்தில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாய் 1-8 வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என்று அரசு அறிவித்திருந்தது. மேலும் வருகிற ஜனவரி 31 ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 1 -12 வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஜனவரி 30 ஆம் தேதி திடீரென அறிவித்தது.


இதற்கு முன் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. 2 மாதங்கள் மட்டுமே நேரடி வகுப்புகளுக்கு சென்ற பள்ளி குழந்தைகள் மீண்டும் நோய்த்தொற்று பாதிப்பால் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டது. நேரடி வகுப்புகள் நடைபெறாத காரணத்தினால் மாணவர்களின் கற்றல் திறன் குறையும் என்று வருந்திய பெற்றோர்களுக்கு நேற்று பிப்ரவரி 1 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது சற்று ஆறுதல் அளித்தது. இந்நிலையில் தற்போது 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உறுதி செய்யப்பட்டு வருவதால் பள்ளிக்கு செல்லும் தடுப்பூசி போடப்படாத குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவக்கூடாது என்று தெரிவித்தார். இதையடுத்து பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12 ஆகிய மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்கலாம் ஆனால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா 3 வது அலை குறையவும் பள்ளிகள் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் மூட கோரிக்கை!  1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் மூட கோரிக்கை! Reviewed by Rajarajan on 2.2.22 Rating: 5

கருத்துகள் இல்லை