Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பொது தேர்வு நடத்துவது குறித்து பள்ளி கல்வித்துறை ஆலோசனை

 பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தேர்வு துறை அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.



தமிழகத்தில், கொரோனா தடுப்புக்கான ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடக்கின்றன. நர்சரி பள்ளிகளையும், ௧6ம் தேதி முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.இந்நிலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஏப்ரலில் பொதுத்தேர்வு நடத்துவதற்கு, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 




இதுதொடர்பாக, பள்ளி கல்வி அதிகாரிகளும், அரசு தேர்வு துறை அதிகாரிகளும் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.இதில், பொதுத்தேர்வை எத்தனை நாட்கள் நடத்துவது; ஒவ்வொரு பாடத்துக்கும் இடைவெளி விடுவதா; தொடர்ச்சியாக நடத்தி முடிப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வு உட்பட மற்ற வகுப்புகளுக்கு எப்போது தேர்வு நடத்துவது என்றும் ஆலோசிக்கப்பட உள்ளது.பின், சுகாதார துறையினருடன் ஆலோசிக்கப்பட்டு, தேர்வு அட்டவணை இறுதி செய்யப்படும் என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பொது தேர்வு நடத்துவது குறித்து பள்ளி கல்வித்துறை ஆலோசனை பொது தேர்வு நடத்துவது குறித்து பள்ளி கல்வித்துறை ஆலோசனை Reviewed by Rajarajan on 14.2.22 Rating: 5

கருத்துகள் இல்லை