Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக மாணவர்கள் நடக்கக் கூடாது

 ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக மாணவர்கள் நடக்கக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அப்படி ஆசிரியர்களுக்கு தொந்தரவாக நடந்து கொள்ளும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.


மேலும் கூறுகையில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுக்கக் கூடாது. அதையும் மீறி தொந்தரவு கொடுத்தால், இந்த செயலில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நடவடிக்கை என்னவென்றால், TC-லும், Conduct Certificate-லும், அவர்கள் செய்த செயலை குறிப்பிட்டும் அதனால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக் கூடாது என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது எனவும் கூறியுள்ளார்

ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக மாணவர்கள் நடக்கக் கூடாது ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக மாணவர்கள் நடக்கக் கூடாது Reviewed by Rajarajan on 9.5.22 Rating: 5

கருத்துகள் இல்லை