Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

15.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க தமிழக அரசு அரசாணை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகள் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து, இந்த முறை 15 லட்சத்து 53 ஆயிரத்து 359 மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.


2017 - 2018, 2018 - 2019 மற்றும் 2019 - 2020-ம் கல்வியாண்டுகளில் படித்த மற்றும் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும். 2017-2018, 2018-2019 கல்வி ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.
15.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க தமிழக அரசு அரசாணை 15.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க தமிழக அரசு அரசாணை Reviewed by Rajarajan on 26.6.19 Rating: 5

கருத்துகள் இல்லை