Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

இந்த ஆண்டு முதல் மரக்கன்று நடும் மாணவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண் அமைச்சர் அறிவிப்பு




இந்த கல்வியாண்டு முதல் மாணவர்கள் தங்களது பள்ளிகளில் மரக்கன்று நட்டு வளர்த்தால் இவர் கூடுதலாக 2 மதிப்பெண் வழங்கப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதத்தில் அரசு அறிவித்தது. இந்நிலையில்,ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையம் அருகில் வி.கே. அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், கலையரங்கம் கட்டுவதற்கானப் பணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார். மேலும் மாணவர்களுக்கு மடிக்கணினிகளையும் வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய அனைவருக்கும் பணி வழங்க முடியாது என்றும், காலிப்பணியிடங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் கூறுகையில் இந்த ஆண்டு முதல் மரங்களை பராமரிக்கும் மாணவர்களுக்கு இரண்டு மதிப்பெண் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்தார். 
இந்த ஆண்டு முதல் மரக்கன்று நடும் மாணவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண் அமைச்சர் அறிவிப்பு இந்த ஆண்டு முதல் மரக்கன்று நடும் மாணவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண் அமைச்சர் அறிவிப்பு Reviewed by Rajarajan on 23.6.19 Rating: 5

கருத்துகள் இல்லை