Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மத்திய அரசு ஊழியர்களுக்கு18 மாத DA நிலுவை விரைவில்

 மத்திய அரசு ஊழியர்களுக்கு18 மாத DA நிலுவை தொகையானது 3 தவணைகளில் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வானது கொரோனா கால பொருளாதார சிக்கலை தவிர்க்கும் வகையில் நிலுவையில் வைக்கப்பட்டது.




இந்நிலையில் DA நிலுவை தொகையானது, ஊழியர்களின் பணி நிலையை பொறுத்து மாறுபடுகிறது. அதாவது, நிலை-13 அல்லது நிலை-14 ல் உள்ள ஊழியர்களுக்கு நிலுவை தொகையானது ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரையும், நிலை-3 ஊழியர்களுக்கு ரூ.11,880 முதல் ரூ.37,554 வரையும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




சமீபத்தில் 2022 ஜூலை மாத தவணைக்கான அகவிலைப்படி உயர்வானது 34 % ல் இருந்து 4% உயர்த்தி 38% ஆக அறிவிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக நிலுவை தொகைக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில். விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகையானது வழங்கப்பட உள்ளது.


மத்திய அரசு ஊழியர்களுக்கு18 மாத DA நிலுவை விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு18 மாத DA நிலுவை விரைவில் Reviewed by Rajarajan on 3.11.22 Rating: 5

கருத்துகள் இல்லை