Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

சப்-இன்ஸ்பெக்டர் பணி அறிவிப்பு - TNUSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 969 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். தாலுகா, சிறப்பு போலீஸ்படை, ஆயுதப்படை போன்ற காவல்துறை பிரிவுகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை பிரிவில் 33 பணியிடங்களும், தாலுகா போலீஸ் பிரிவில் 660 இடங்களும், ஆயுதப்படை பிரிவில் 276 பணியிடங்களும் உள்ளன. 

இந்த பணிகளுக்கு 1-7-2019-ந் தேதியில் 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். துறை பணியாளர்கள் ரூ.1000 செலுத்தி இந்த தேர்வெழுதி பதவி உயர்வு பெற முடியும். இதற்கான விண்ணப்பப்பதிவு மார்ச் 20-ந் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 19-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.tnusrbonline.org/ என்ற இணையதளத்தில் பார்க்கவும்.
சப்-இன்ஸ்பெக்டர் பணி அறிவிப்பு - TNUSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணி அறிவிப்பு - TNUSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு Reviewed by Rajarajan on 19.3.19 Rating: 5

கருத்துகள் இல்லை