Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பி.இ, பி.டெக் கலந்தாய்வுக்கு இதுவரை ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர், விண்ணப்பித்த அனைவருக்கும் கல்லூரியில் சேருவதற்கு வாய்ப்பு




இந்த ஆண்டு பி.இ, பி.டெக் படிப்புகளுக்கு நேற்று வரை ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. அவற்றிற்கான ஆன்லைன் கலந்தாய்வை இந்த ஆண்டு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது. கடந்தாண்டை காட்டிலும் 20 ஆயிரம் விண்ணப்பங்கள் இதுவே இந்த ஆண்டு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விண்ணப்ப நிறைவடைந்த நிலையில், ரேண்டம் எண் ஜூன் மூன்றாம் தேதி வெளியிடப்பட உள்ளது சுமார் 50 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு ஜுன் 6 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.



வருகிற ஜூன் 20ம் தேதி முதல் மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி ஜூலை 28-ஆம் தேதி வரை பொது பிரிவினருக்கும் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கல்லூரிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அனைவருக்கும் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது...
பி.இ, பி.டெக் கலந்தாய்வுக்கு இதுவரை ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர், விண்ணப்பித்த அனைவருக்கும் கல்லூரியில் சேருவதற்கு வாய்ப்பு பி.இ, பி.டெக் கலந்தாய்வுக்கு இதுவரை ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர், விண்ணப்பித்த அனைவருக்கும் கல்லூரியில் சேருவதற்கு வாய்ப்பு Reviewed by Rajarajan on 1.6.19 Rating: 5

கருத்துகள் இல்லை