Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

இ- பாஸ் நடைமுறைகளில் மாற்றம் இல்லை! மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், வெளி மாநிலங்களுக்கு செல்லவும் இ-பாஸ் கட்டாயம்!

வணிக வளாகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்; காய்கறிகள், மளிகைக் கடைகள் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி - தமிழக அரசு.

காய்கறிக்கடைகள், மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி!
முன்னதாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டிருந்தது பிற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு.

144 தடை மற்றும் இரவு நேர ஊரடங்கு தடை தொடர்கிறது.

தங்கும் வசதி கொண்ட ஓட்டல்கள், சொகுசு விடுதிகளுக்கு தடை நீட்டிப்பு அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட தடை நீட்டிப்பு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட தடை நீட்டிப்பு

ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு.

திரையரங்கு, மது கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் செயல்பட தடை நீட்டிப்பு விழாக்கள், கூட்டங்கள், ஊர்வலங்கள், கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை நீட்டிப்பு 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ள சிறிய கோவில்களில் வழிபாடு நடத்த அனுமதி .


பெரிய வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது தமிழகம் முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் சுற்றுலா தலங்களுக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு.




தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! தமிழகத்தில் தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! Reviewed by Rajarajan on 30.7.20 Rating: 5

கருத்துகள் இல்லை