Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தேர்வு மையங்களுக்கு செல்வதில் உள்ள சிக்கல்களை தீர்க்க 19 ஆம் தேதிஅறிவிப்பு



வெளிமாவட்டங்களில் தங்கி உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பது குறித்து வருகின்ற 19 ஆம் தேதி தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

இந்நிலையில், தேர்வு எழுத உள்ள மாணவர்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று போக்குவரத்து முடக்கத்தால் அங்கேயே தங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்ற 19 ஆம் தேதி இது போன்ற பிரச்னைகளை தீர்க்க என்ன நடவடிக்கை எடுப்பது என்று குறித்து தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும்.

10 ஆம் வகுப்பு தேர்வுகளை 1 ஆம் தேதி நடத்துவது மாணவர்கள், பெற்றோர்கள் நலன் கருதி கல்வியாளர்கள் குழு ஆலோசனையின்படி தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. முதல்வரின் ஒப்புதல் பெற்றுத்தான் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. குறிப்பாக குஜராத், கேரளா போன்ற மாநிலங்களில் தேர்வுகள் முடிவுற்று விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க ஆட்சியர்கள் தேர்வு மையங்களை பார்வையிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மாணவர்களை நேரடியாக தேர்வு மையத்திற்கு அழைத்து சென்று, திரும்பவும் கொண்டு வந்து விடுவதற்கான ஏற்பாடுகளை ஆட்சியர்கள் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களுக்கு செல்வதில் உள்ள சிக்கல்களை தீர்க்க 19 ஆம் தேதிஅறிவிப்பு தேர்வு மையங்களுக்கு செல்வதில் உள்ள சிக்கல்களை தீர்க்க 19 ஆம் தேதிஅறிவிப்பு Reviewed by Rajarajan on 14.5.20 Rating: 5

கருத்துகள் இல்லை