Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

திங்கட்கிழமை முதல் அனைத்து அலுவலர்களும் பணிக்கு வர அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு


Was


திங்கட்கிழமை முதல் அனைத்து அலுவலர்களும் பணிக்கு வர வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வளாகத் தலைவர்கள், துறைத் தலைவர்கள், மண்டல வளாகத் தலைவர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் தமிழக அரசின் ஆணையை மேற்கோள் காட்டி மே 18 முதல் அனைத்து அலுவலர்களையும் பணிக்கு வர அறிவுறுத்திள்ளது.
சனிக்கிழமை உட்பட வாரத்துக்கு 6 நாட்கள் வேலைநாட்களாக இருக்கும் என்றும், 50 விழுக்காடு பணியாளர்களைக் கொண்டு அலுவலகங்கள் செயல்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மொத்த அலுவலர்களையும் இரு பிரிவாகப் பிரித்து ஒரு பிரிவினர் திங்கள் செவ்வாய் கிழமைகளிலும், மற்றொரு பிரிவினர் புதன் வியாழக் கிழமைகளிலும் எனச் சுழற்சி முறையில் பணியாற்றுவர் எனத் தெரிவித்துள்ளது.
அனைத்துப் பணியாளர்களையும் இரு பிரிவாகப் பிரித்துச் சுழற்சி முறையில் பணியாற்றுவதற்கான கால அட்டவணையைத் தயாரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
திங்கட்கிழமை முதல் அனைத்து அலுவலர்களும் பணிக்கு வர அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு திங்கட்கிழமை முதல் அனைத்து அலுவலர்களும் பணிக்கு வர அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு Reviewed by Rajarajan on 17.5.20 Rating: 5

கருத்துகள் இல்லை