Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

+2-விடைத்தாள்-திருத்தும்-பணி இன்றுமுதல்-தொடக்கம்




12ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது. திருச்சி, கோவை, ராணிப்பேட்டை, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பணி தொடங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் கூடுதலாக 8 மையங்கள் அமைக்கப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் 11 மையங்களிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2 மையங்களிலும் பணி நடைபெறுகிறது.

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இடையே சமூக இடைவெளி கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடல்வெப்ப அளவை பதிவு செய்ய தெர்மல் ஸ்கிரினிங் செய்யப்படுகிறது. முகக்கவசங்கள் வழங்கப்பட்டு தானியங்கி சானிடைசர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
+2-விடைத்தாள்-திருத்தும்-பணி இன்றுமுதல்-தொடக்கம் +2-விடைத்தாள்-திருத்தும்-பணி இன்றுமுதல்-தொடக்கம் Reviewed by Rajarajan on 27.5.20 Rating: 5

கருத்துகள் இல்லை