Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை



தமிழகத்தில் நேற்று முதல் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதன்படி அனைத்து ஆசிரியர்களும் நேற்று முதல் பள்ளிக்கு வருகை புரிய தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


இந்த கூட்டத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் தலைவர் ரா.நடேசன் வலியுறுத்தியுள்ளார். மேலும் மத்திய அரசு அறிவித்துள்ள 11 சதவீதம் அகவிலைப்படி உயர்வை, தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை Reviewed by Rajarajan on 3.8.21 Rating: 5

கருத்துகள் இல்லை