Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

  

தொடர் மழை காரணமாக 13/12/22 நாளை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக அரை நாள் விடுமுறை அறிவித்து காஞ்சிபுரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் இன்று (டிச.12) அரை நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக அரை நாள் பள்ளிகளுக்கு விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  

வேலூர் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்குள் வகுப்புகளை முடித்துக்கொள்ளுமாறு பள்ளிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாலைநேரத்தில் கூடுதலாக மழை பெய்யும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்


திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (12.12.2022) விடுமுறை.

காஞ்சிபுரம் மாவட்டம் - காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மட்டும் இன்று (12.12.2022) விடுமுறை - தலைமை ஆசிரியை ராஜாவி அறிவிப்பு.

தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (12.12.2022) விடுமுறை.

தொடர் மழை காரணமாக (12.12.2022) இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகா பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.


தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் Reviewed by Rajarajan on 12.12.22 Rating: 5

கருத்துகள் இல்லை