Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

புயல் தீவிரம்; முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படாது..!

 மான்டாஸ் புயல் தீவிரம் எடுத்துள்ளது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என்று அறிவிப்பு.


மாண்டாஸ் புயல் தற்போது சென்னையில் இருந்து 520 கி.மீ தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது. அதனால் அதிக காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் கடலோர மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதனை தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கப்படாது என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதனால் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

புயல் தீவிரம்; முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படாது..!  புயல் தீவிரம்; முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படாது..! Reviewed by Rajarajan on 8.12.22 Rating: 5

கருத்துகள் இல்லை