Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

3,5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குறித்து சட்டசபையில் கல்வி அமைச்சர் அறிவிப்பு


3,5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குறித்து விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வரைவு அறிக்கையின் மீதான தமிழக அரசின் கருத்துக்கள் கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அதில் தமிழகத்தில் மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே இருக்கும் என தெளிவாக சொல்லப்பட்டது. மத்திய அரசு, மாநில அரசு இடையே இருக்கும் மொழி ஆங்கிலம் தான் இருந்து வருகிறது. புதிய கல்விக்கொள்கையை முழுமையாக பரிசீலனை செய்ய பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழு அறிக்கை தாக்கல் செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.மேலும் சமூக நீதி, கூட்டாட்சி தத்துவத்திற்கு பாதிப்பு உண்டாக்கினால் புதிய கல்விக்கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என்றும் மத்திய அரசு எவ்வளவு வலியுறுத்தினாலும் சில கொள்கை முடிவுகளில் தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது 3,5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்பதில் ஒரு போதும் பின்வாங்கப்போவதில்லை என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்தார்.
3,5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குறித்து சட்டசபையில் கல்வி அமைச்சர் அறிவிப்பு 3,5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குறித்து சட்டசபையில் கல்வி அமைச்சர் அறிவிப்பு Reviewed by Rajarajan on 16.9.20 Rating: 5

கருத்துகள் இல்லை