Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

TET - நிபந்தனை ஆசிரியர்களுக்கு கருணை காட்டுமா தமிழக அரசு ?வாழ்வாதாரத்தை காப்பாற்ற கோரிக்கை

 
Was

அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் தகுதித்தேர்வு நிபந்தனை ஆசிரியர்களுக்கும் கருணை காட்டுமா தமிழக அரசு?

பணியில் சேர்ந்து பத்தாண்டுகள் நிறைவடைந்தும்டெட் நிபந்தனை ஆசிரியர்களுக்குவிலக்கு அளிக்காததால்எவ்வித சலுகையும் பெற முடியாத சூழல் நீடிப்பதாகபலர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி(ஆர்.டி.), ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) 2010 ஆக., 23ம் தேதி கட்டாயமாக்கப்பட்டது.

இச்சட்டம் தமிழகத்தில், 2012 நவம்பர் 16ம் தேதிக்குப் பிறகு ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு அவசியம் என்று தமிழக கல்வித் துறை ஓர் சுற்றறிக்கை வெளியிட்டிருந்ததுமத்திய அரசு சட்டமியற்றிய பின்பும்தமிழக அரசுபழைய நடைமுறைப்படி தான்ஆசிரியர்களை நியமித்ததுஆனால்ஆர்.டி.., சட்டத்தை ஏற்ற பின்டெட் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்கள்அரசுப்பணியில் தொடர வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டது.இதற்கு எதிராககோர்ட்டில் வழக்கு தொடுத்துஅரசுப்பள்ளி மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரிவோர் விலக்கு பெற்றனர்இவர்களுடன் பணியில் சேர்ந்த அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும்விலக்கு வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது.

மாநிலம் முழுக்கவெறும் ஆயிரத்து 700 ஆசிரியர்களேடெட் நிபந்தனையில் இருந்து விலக்கு கோருவதால்சிறப்பு தேர்வோ அல்லது பணியிடை பயிற்சிகளோ வழங்கப்படும் எனகல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்இதற்கிடையே ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால்இது சார்ந்து எந்த முடிவும் எட்டப்படவில்லைதற்போதுள்ள சூழலில் தேர்வுகள் ரத்து செய்துவரும் நிலையில் இவர்களுக்கு கல்வி அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தபடி ஆன்லைன் மூலம் புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளித்து இவர்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.

பணியில் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகியும்எந்த பலன்களும் பெற முடியாமல் தவிப்பதாகஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.இது குறித்துடெட் நிபந்தனை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'மத்திய அரசின் கட்டாய கல்விச்சட்டம் இரு ஆண்டுகளுக்கு பின்பேதமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதுஇதற்கிடையில்பணியில் சேர ஒப்புதல் வழங்கிவிட்டுகடந்த 8 ஆண்டுகளாக இவர்களை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறதுமேலும் இவர்களுக்கு ஊக்க ஊதியம் மற்றும் ஊதிய பலன்களை நிறுத்த கூடாதென ஐகோர்ட் உத்தரவிட்டும்அந்த உத்தரவு இன்றுவரை மதிக்கப்படவில்லை.

குறிப்பாக பத்தாண்டுகளானால் தேர்வுநிலை ஆசிரியர்களாக தரம் உயர்த்தப்படுவது வழக்கம்.

அரசுப்பள்ளியில் சேர்ந்தோருக்கு இச்சலுகை வழங்கப்படும் போதுஅதே நாளில் அரசு உதவிபெறும் பள்ளியில் சேர்ந்தோர்எந்த சலுகையும் இன்றி திண்டாடும் நிலை நீடிக்கிறதுவிரைவில் அரசு 1700 டெட் நிபந்தனை ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்குசெவிசாய்க்க வேண்டும்என்றனர்இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடுத்துஅரசுப்பள்ளி மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரிவோர் விலக்கு பெற்றனர்இவர்களுடன் பணியில் ' என்பது குறிப்பிடத்தக்கது.
TET - நிபந்தனை ஆசிரியர்களுக்கு கருணை காட்டுமா தமிழக அரசு ?வாழ்வாதாரத்தை காப்பாற்ற கோரிக்கை TET - நிபந்தனை ஆசிரியர்களுக்கு கருணை காட்டுமா தமிழக அரசு ?வாழ்வாதாரத்தை காப்பாற்ற கோரிக்கை Reviewed by Rajarajan on 30.8.20 Rating: 5

கருத்துகள் இல்லை