Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் திட்டவட்டம்


Was
நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில்  இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், அங்கிருந்து சுமார் 4,000 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்குத்  தயாராகியுள்ளனர்.

அவர்கள் இந்தியா வந்து நீட் தேர்வு எழுத முடியாத நிலை உள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் அல்லது நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், இந்திய மருத்துவக் கவுன்சில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதில், தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியா தவிர்த்து பிற இடங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Was

நீட் தேர்வை மேலும் ஒத்திவைப்பது, மாணவர்களின் கல்வியிலும், அடுத்தடுத்த கல்வியாண்டு அட்டவணைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை செப்டம்பர் 13ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் திட்டவட்டம் நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் திட்டவட்டம் Reviewed by Rajarajan on 25.8.20 Rating: 5

கருத்துகள் இல்லை