Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பத்தாம் வகுப்பு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி இல்லை.. பெற்றோர்கள் கவலை...


பத்தாம் வகுப்பு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி இல்லையா...? பெற்றோர்கள் கவலை...? பதினொன்றாம் வகுப்பு வேதியியல் பாடத்தில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்படவில்லை. எனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு அவ்வாறு இருக்குமா என மாணவர்கள் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 10 தேதி அறிவிக்கப்படும் என்று தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக தேர்வுகள் ரத்து செய்தது அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக அரசு. மாணவர்களின் காலாண்டு அரையாண்டு மதிப்பெண் மற்றும் வருகை பதிவு அடிப்படையில் மதிப்பெண் வழங்க உத்தரவு பிறப்பித்தது. அதற்கான பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு வருகை தராத மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படாது என அறிவிப்பு வெளிவந்தது.
Was
இதனால் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கலக்கம் அடைந்துள்ளனர். உடல் நலக்குறைவு குடும்பம் சூழ்நிலை காரணமாக வருகை தராத மாணவர்கள் நிலை கேள்வி குறியாக உள்ளது. இது குறித்து அரசு மற்றும் பள்ளி கல்வி துறை தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டும். அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என முதல்வர் அறித்த அறிவிப்பு படி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி இல்லை.. பெற்றோர்கள் கவலை... பத்தாம் வகுப்பு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி இல்லை.. பெற்றோர்கள் கவலை... Reviewed by Rajarajan on 10.8.20 Rating: 5

கருத்துகள் இல்லை