Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

ஜூன் மாதம் முதல் அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு



தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் பயோமெட்ரிக் முறை அமல்: அதிகாரிகள் தகவல்

இந்நிலையில் முதற்கட்டமாக 3,688 அரசு உயர்நிலைப்பள்ளிகளிலும், 4,040 மேல்நிலைப்பள்ளிகளிலும் இந்த பயோமெட்ரிக் முறை அமலுக்கு வருகிறது. இதை செயல்படுத்துவதற்காக அரசு பள்ளி ஆசிரியர்களின் விவரங்கள் அனுப்ப முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது

அதன்படி ஆதாரில் உள்ள முழு விவரங்களுடன் ஆசிரியர்களின் விவரங்கள் இஎம்ஐஎஸ் என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்படுள்ளது. தனி சாப்ட்வேரில் இந்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது

இதற்காக அமைச்சுப்பணியாளர்கள், கணினி பயிற்றுநர்களுக்கு பயோமெட்ரிக் முறை அமல்படுத்துவதற்கான பயிற்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது
இந்த பயிற்சி மொத்தம் 24 கல்வி மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் இந்த முறை அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்
ஜூன் மாதம் முதல் அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு ஜூன் மாதம் முதல் அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு Reviewed by Rajarajan on 30.4.19 Rating: 5

கருத்துகள் இல்லை