Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஒரு முழு பார்வை




இன்று வெளியிடப்பட்ட இந்த தேர்வு முடிவில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவியர் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.3 சதவீதம் பேரும் மாணவியர் 97.0 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,548. இதில் 6,100 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் 92.48 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர், அதே போல் அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.53 சதவீதம் தேர்ச்சியினை கொடுத்துள்ளனர். மொழிப்பாடத்தில் 96.12 சதவீதம், ஆங்கிலத்தில் 97.35 சதவீதம், கணிதத்தில் 96.46 சதவீதம், அறிவியலில் அதிகபட்சமாக 98.56 சதவீதம் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் 97.07 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

98.53 சதவீதம் தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்திலும், 98.48 சதவீதம் தேர்ச்சியுடன் ராமநாதபுரம் மாவட்டம் இரண்டாம் இடத்திலும், 98.45 தேர்ச்சி சதவீதத்துடன் நாமக்கல் மாவட்டம் மூன்றாம் இடத்திலும் உள்ளது. தேர்வெழுதிய 4,816 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 4,395 பேரும், 152 சிறை கைதிகளில் 110 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஒரு முழு பார்வை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஒரு முழு பார்வை Reviewed by Rajarajan on 30.4.19 Rating: 5

கருத்துகள் இல்லை