Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கொரோனா அச்சத்தில் நம்மை சார்ந்த விட்டு விலங்குகளுக்கு உணவு அளிக்க மறந்துவிடாதீர்கள் - அவைகளுக்கு நாம் தான் உலகம்

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு பூனைகளும், நாய்களும் உயிரிழந்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெரு நாய்களும் பூனைகளும் உணவின்றி மடிந்தால் அதனால் உருவாகும் தொற்றுநோய்கள் குறித்து முன்னெச்சரிக்கை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தனித்துவிடப்பட்ட பூனைக்குட்டிகளும் நாய்க்குட்டிகளும் சீக்கிரத்தில் இறக்க வாய்ப்பு உள்ளதாக விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். நாய்களும் பூனைகளும் மனிதர்களைச் சார்ந்தே வாழ்ந்து வருவதால் அவற்றை இறப்பில் இருந்து தடுக்க உணவும், தண்ணீரும் வீட்டு வாசலில் வைக்கும்படி விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொரோனா அச்சத்தில் நம்மை சார்ந்த விட்டு விலங்குகளுக்கு உணவு அளிக்க மறந்துவிடாதீர்கள் - அவைகளுக்கு நாம் தான் உலகம்
கொரோனா அச்சத்தில் நம்மை சார்ந்த விட்டு விலங்குகளுக்கு உணவு அளிக்க மறந்துவிடாதீர்கள் - அவைகளுக்கு நாம் தான் உலகம் கொரோனா அச்சத்தில் நம்மை சார்ந்த விட்டு விலங்குகளுக்கு உணவு அளிக்க மறந்துவிடாதீர்கள் - அவைகளுக்கு நாம் தான் உலகம் Reviewed by Rajarajan on 27.3.20 Rating: 5

கருத்துகள் இல்லை