Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 21% ஆக உயர்வு – ஜனவரி முதல் அமல்?

 




Was
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், சுமார் 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 58 லட்சம் அரசு ஓய்வூதியம் பெறுவோர் பயன்பெறும் வகையில் அகவிலைப்படி உயர்வினை 2021 ஜனவரி மாதம் முதலே அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு வரிவசூல் குறைந்து வருமான இழப்பு ஏற்பட்டது. இதனால் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஜனவரி 2021 முதல் மீண்டும் அது வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2021 ஜனவரி-ஜூன் முதல் அகவிலைப்படி அறிவிப்பு மற்றும் ஜூலை முதல் டிசம்பர் 2020 வரை அறிவிக்கப்பட்ட 4 சதவீத அகவிலைப்படி உயர்வு (21%) என இருஅறிவிப்புகள் 7வது ஊதியக்குழு சீரமைப்பில் இருக்கும் என்றும் இது 2021 ஜனவரியில் அமல்படுத்தப்படலாம் என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கிறது.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 21% ஆக உயர்வு – ஜனவரி முதல் அமல்? அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 21% ஆக உயர்வு – ஜனவரி முதல் அமல்? Reviewed by Rajarajan on 12.1.21 Rating: 5

கருத்துகள் இல்லை